Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Friday, August 28, 2020

பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

 

             

       கேட்கிறதா  என்  குரல்

 1.         மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

            அ) ஒளவையார்

            ஆ) திருமூலர்

            இ) தொல்காப்பியர்

            விடை: ஆ) திருமூலர்  

 

2.         கூற்று 1: கிழக்கிலிருந்து வீசுவதால் கொண்டல் எனப்படுகிறது.

            கூற்று 2: மேற்கிலிருந்து வீசுவதால்  தென்றல்  எனப்படுகிறது.

            அ.கூற்று 1தவறு 2 சரி            

            ஆ. கூற்று 1, 2 சரி          

            இ. கூற்று 1 சரி 2 தவறு

            விடை:  இ. கூற்று 1 சரி 2 தவறு

 

3.         பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது எனும் நூலின் ஆசிரியர்

            அ) சொக்கநாதப் புலவர்

            ஆ) குமரகுருபரர்

            இ) காளமேகப்புலவர்

            விடை: அ) சொக்கநாதப் புலவர்

 

4.         பருவகாற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

            அ) ஹூப்ரு

            ஆ) ஹிப்பாலஸ்

            இ) ஹிப்ரோவர்

            விடை: ஆ) ஹிப்பாலஸ்

 

5.         சங்கபுலவர் வெண்ணிக்குயத்தியார் காற்றை இவ்வாறு அழைக்கிறார்.

            அ) களி

            ஆ) வலி

            இ) வளி

            விடை: இ) வளி

 

6.         இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை ______ தருகிறது.

            அ) வடகிழக்குப் பருவக்காற்று

            ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

            இ) தெங்கிழக்குப் பருவக்காற்று

            விடை: ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

 

7.         வளி மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்துப் பாடியவர்

            அ) ஐயூர் முடவனார்

            ஆ) இளநாகனார்

            இ) மாங்குடி மருதனார்

              விடை: அ) ஐயூர் முடவனார்

 

8.         வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்

            அ) ஜூன் முதல் செப்டம்பர் வரை

            ஆ) ஜூலை முதல் அக்டோபர் வரை

            இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

விடை: இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

 

9.         உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.

            அ) முதலிடம்

            ஆ) இரண்டாம்

            இ) ஐந்தாம்

            விடை: இ) ஐந்தாம்

 

10.       இந்தியாவில் மிகுந்த உயிரிப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது.

            அ) நீர் மாசு

            ஆ) காற்று மாசு

            இ) நிலமாசு

            விடை: ஆ) காற்று மாசு

 

11.       உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா பெறுவது

            அ) மூன்றாமிடம்

              ஆ) இரண்டாமிடம்

            இ) முதலிடம்

            விடை: ஆ) இரண்டாமிடம்

 

12.       கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடிய புலவர்

            அ) மதுரை இளநாகனார்

            ஆ) வெண்ணிக் குயத்தியார்

            இ) ஐயூர் முடவனார்

            விடை: அ) மதுரை இளநாகனார்

 

13.       கருத்து 1: வடக்கிலிருந்து வீசுவதால் வாடைக்காற்று எனப்படுகிறது.

            கருத்து 2: இவ்வாடைக்காற்று பனிபகுதியிலிருந்து வீசுவதால் , குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிடறது.

அ) கருத்து 1 சரி   

ஆ) கருத்து 2 சரி  

இ) கருத்து 1, 2 சரி            

ஈ) கருத்து 1, 2 தவறு

விடை: இ) கருத்து 1, 2 சரி

 

   14.   மொழியின் சிறப்பை அறிய துணை செய்வது

            அ) எழுத்து

            ஆ) இலக்கணம்

            இ) சொல்

            விடை: ஆ) இலக்கணம்


 பத்தாம் வகுப்பு - இணையவழி  தேர்வு மூன்றாம் பகுதிக்கு 
Click here

 

 

 

 

 

                               

No comments:

Post a Comment