Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331
Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, January 20, 2021

Social study material - 01



NMMS/TRUST


SAT STUDY MATERIAL

 
Click here to download

Tenth Tamil Special Guide

 

குறைக்கப்பட்ட


 பாடத்திட்டத்தின்படி 


தயாரிக்கப்பட்ட சிறப்பு நூல்


பத்தாம் வகுப்பு 


தமிழ் பாடம் 


Tamil Special Guide

 
Click here to download

Monday, August 31, 2020

பத்தாம் வகுப்பு இயல் - 2 இலக்கணம் இணையவழித் தேர்வு - தொகை நிலைத்தொடர்கள்

 



விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -2

 


விருந்து போற்றுதும்

 11.     நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் வழிச் செல்வோர்க்காக மிகுதியாக கட்டப்பட்டவை

          அ) உணவகங்கள்

          ஆ) சத்திரங்கள்

          இ) விடுதிகள்

          விடை: ஆ) சத்திரங்கள்

 12.     மின்சோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

          அ) வாழையிலை விருந்து விழா

          ஆ) விருந்தோம்பல் விழா

          இ) தமிழர்  விருந்து விழா

          விடை: அ) வாழையிலை விருந்து விழா

 13.     வாழை இலையின் குறுகலான பகுதி உண்பவரின் எப்பக்கம் வரவேண்டும்?

          அ) வலப்பக்கம்

          ஆ) இடப்பக்கம்

          இ) நடுப்பக்கம்

          விடை: ஆ) இடப்பக்கம்

 14.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) மோப்பக் குழையும் அனிச்சம்               - திருவள்ளுவர்

          ஆ) விருந்தே புதுமை                                   - தொல்காப்பியம்

          இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்   - கம்பர்

          விடை: இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்      - கம்பர்

 15.     விருந்தோம்பல் பற்றிய 17- ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம்

          அ) மதுரை

          ஆ) சிதம்பரம்

          இ) மாமல்லபுரம்

          விடை: ஆ) சிதம்பரம்

 16.     கூற்று 1: தலைவாழை இலையில் உணவளிப்பது நம் மரபாகும்.

          கூற்று 2: தமிழர் பண்பாட்டில் உணவுக்கே தனித்த இடமுண்டு.

          அ) கூற்று 1 சரி 2 தவறு

          ஆ) கூற்று 1தவறு 2 சரி

          இ) கூற்று 1, 2 தவறு

          விடை: அ) கூற்று 1 சரி 2 தவறு

 17.     கருத்து 1: தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.

          கருத்து 2: உறவினர் வேறு, விருந்தினர் வேறு, முன்பின் அறியாமல் வரும் புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 18.     கருத்து 1: விதைக்காக வைத்திருந்த நெல்லை உரலில் இடித்து உணவு சமைத்த நிகழ்வைக் குறிப்பிடும் இலக்கியம் புறநானூறு.

          கருத்து 2: நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடுவது

          நல்லியல்பு எனக்குறிப்பிடும் இலக்கியம் நற்றிணை.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 19.     கருத்து 1: வாழை இலையின் வலது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான சிறிய

          உணவு வகைகளை வைப்பர்.

          கருத்து 2: வாழை இலையின் இடது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான பெரிய அளவு உணவினை வைத்துப் பரிமாறுவார்கள்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: ஈ) கருத்து 1, 2 தவறு

 20.     பொருத்துக.

          அ) உண்டாலம்ம இவ்வுலகம்                               - 1. பொருநராற்றுப்படை

          ஆ) ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்  - 2. குறுந்தொகை

          இ) காலின் ஏழடிப் பின் சென்று                                      - 3. புறநானூறு

          ஈ) பலர்புகு வாயில் அடைப்ப                               - 4. நற்றிணை

          அ) 1, 3, 4, 2

          ஆ) 4, 3, 2, 1

          இ) 2, 4, 1, 3

          ஈ) 3, 4, 1, 2

          விடை: ஈ) 3, 4, 1, 2


விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -1 படிக்க Click here  

         தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here 


 

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -1

விருந்து போற்றுதும்

 1. ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்' - இத்தொடர் இடம் பெற்ற நூல்

          அ) நற்றிணை

          ஆ) புறநானூறு

          இ) கம்பராமாயணம்

          விடை: அ) நற்றிணை

 

2. இளையான்குடி மாறன் விருந்து படைத்த திறம் கூறும் நூல்

          அ) கம்பராமாயணம்

          ஆ) பெரியபுராணம்

          இ) சிலப்பதிகாரம்                                                                                               

         விடை: ஆ) பெரியபுராணம்

 

3.  கல்வியும்  செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) தொல்காப்பியர்

          விடை: அ) கம்பர்

 

4.  பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுவது

          அ) கல்வி

          ஆ) பொறை

          இ) விருந்தோம்பல்

          விடை: இ) விருந்தோம்பல்  

 

5.  விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) செயங்கொண்டார்

          விடை: ஆ) இளங்கோவடிகள்

 

6.     விருந்தினருக்கு உணவிடுவோரின்  முகமலர்ச்சியை உவமையாக்கிப் பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) கம்பர்

          இ) செயங்கொண்டார்

          விடை: இ) செயங்கொண்டார்

 

7.  தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை

          அ) விருந்தினரைப் போற்றல்

          ஆ) தனித்து உண்ணாமை

          இ) விருந்துப் படைத்தல்

          விடை: ஆ) தனித்து உண்ணாமை

 

8.  நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கரியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது.

          அ) சிறுபாணாற்றுப்படை

          ஆ) பொருநாற்றுப்படை

          இ) பட்டினப்பாலை

          விடை: அ) சிறுபாணாற்றுப்படை

 

9. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) ஔவையார்

          இ) கம்பர்

          விடை: ஆ) ஔவையார்       

 

10. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இத்தொடர் இடம் பெற்றது.

          அ) அகநானூறு

          ஆ) புறநானூறு

          இ) குறுந்தொகை

         விடை: இ) குறுந்தொகை


          தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -2 படிக்க Click here