Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur

Wednesday, August 26, 2020

பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் ஒரு மதிப்பெண்கள்

 


                    உரைநடையின்  அணிநலன்கள்

                                                                  - எழில்முதல்வன்

 

1.    எடுத்துக்காட்டு உவமை அணி உரைநடையில்                                  இடம்பெறும்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கணை

          இ) இணை எதுகை

           விடை: அ) இணை ஒப்பு

 

2.       இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல                             இருபுறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்' இவ்வுமை இடம்                  பெற்ற நூல்

          அ) மழையும் புயலும்

          ஆ) குறிஞ்சி மலர்

          இ) தமிழ்த்தென்றல்

          விடை: ஆ) குறிஞ்சி மலர்    

 

3.    உரைநடையின் அணிநலன்கள் எனும் கட்டுரை                                 இடம்பெற்றுள்ள நூல்

          அ) இனிக்கும் நினைவுகள்

          ஆ) தமிழ் உரைநடை

          இ) புதிய உரைநடை

          விடை: இ) புதிய உரைநடை

 

4.    'இந்தியா தான் என்னுடைய மோட்சம்; என் இளமையின் மெத்தை; என் கிழக்காலத்தின் காசி' என்று கூறியவர்

          அ) அறிஞர் அண்ணா

           ஆ) பாரதி

          இ) மு. வரதராசனார்

          விடை: ஆ) பாரதி

 

5.    சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும்             புதிருமனா முரண்படும் கருத்துகளை அமைத்து எழுவது

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கண

          இ) எதிரிணை இசைவு

          விடை: இ) எதிரிணை இசைவு

 

6.    கூற்று 1: திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி 1982         ஆம் ஆண்டு வெளிவந்தது.

         கூற்று 2: இந்தக்  கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு             மொழிகள் இருந்தன.

           அ) கூற்று 1 தவறு 2 சரி          

          ஆ) கூற்று 1 சரி 2 தவறு         

          இ) கூற்று 1, 2 சரி

          விடை: அ) கூற்று 1 தவறு 2 சரி

 

7.       உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்த ஒன்றென             மாட்டின் அஃது

          அ) உவமை

          ஆ) உருவகம்

          இ) எடுத்துகாட்டு உவமை

           விடை: ஆ) உருவகம்

 

8.       மழையும் புயலும்' என்னும் நூலின் ஆசிரியர்

          அ) எழில்முதல்வன்

          ஆ) வ. ராமசாமி

          இ) மு. வரதராஜன்

          விடை: ஆ) வ. ராமசாமி

 

9.       குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த                 வயிறுகள் ஒரு பக்கம் புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்'                 இது யாருடைய உரைநடை?

          அ) அறிஞர் அண்ணா

          ஆ) பெரியார்

           இ) ப. ஜீவானந்தம்

          விடை: இ) ப. ஜீவானந்தம்

 

10.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) தமிழின்பம்               - நூலாசிரியர் இரா. பி. சே.

           ஆ) நாட்டுப்பற்று        - கட்டுரையாசிரியர் அண்ணா

          இ) குறிஞ்சிமலர்            - நூலாசிரியர் பார்த்தசாரதி

          விடை: ஆ) நாட்டுப்பற்று   - கட்டுரையாசிரியர் அண்ணா

 

11.     அக இலக்கியத்தில் காணப்படும் குறீயிடு யாது?

          விடை: இறைச்சி, உள்ளுரை

 

12.     Data- எனும் சொல்லின் பொருள் ________

           விடை: உள்ளீடு

 

13.     சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய இலக்கியம் _________

          விடை: அற இலக்கியம்

 

14.     குறிஞ்சி மலர் எனும் நூலை இயற்றியவர்

          விடை: நா. பார்த்தசாரதி

 

15.     உமயையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென                     மாட்டின் அஃது _______

          விடை: உருவகம்

 

16.     முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன'- இவ்வரியில்                 இடம்பெற்ற உருவகம் எது?

          விடை: முகநிலவில்

 

17.     வ. ராமசாமி இயற்றிய நூல் ________

          விடை: ‘மழையும் புயலும்'

 

18.     புதிய உரைநடை' என்னும் நூலை எழுதியவர் யார்?

           விடை: எழில் முதல்வன்


பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண் பயில இங்கே அழுத்தவும்

 

No comments:

Post a Comment