Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Monday, August 31, 2020

தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம்

 

தொகை நிலைத்தொடர்கள்

 1.       தொகை நிலைத்தொடர்கள் _____ வகைப்படும்.

          அ) ஆறு

          ஆ) ஐந்து

          இ) நான்கு

          விடை: அ) ஆறு

 2.       பொருத்துக.

          1. தாய்சேய்           - அ) பண்புத்தொகை

          2. கொல்களிறு     - ஆ) உவமைத்தொகை

          3.இன்மொழி        - இ) வினைத்தொகை

          4. மலர்க்கை                   - ஈ) உம்மைத்தொகை

          அ) 1-, 2-, 3-, 4-

          ஆ) 1-, 2-, 3-, 4-

          இ) 1-, 2-, 3-, 4-

          விடை: ஆ) 1-, 2-, 3-, 4-

3.       காலம் கரந்த பெயரெச்சம்

          அ) பண்புத்தொகை

          ஆ) வேற்றுமைத்தொகை

          இ) வினைத்தொகை

          விடை: இ) வினைத்தொகை

 4.       சிறப்புப்பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும்                                 தொகைச்சொல்

          அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          ஆ) பண்புத்தொகை

          இ) உம்மைத்தொகை

          விடை: அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 5.       ‘செங்காந்தள்' - இப்பண்புத்தொகைச் சொல்லில்                             மறைந்து வரும் உருபு.

          அ) ஆன

          ஆ) ஆகிய

          இ) மை

          விடை: ஆ) ஆகிய

6.       பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) அன்மொழித்தொகை         - சிவப்புச் சட்டை பேசினார்

          ஆ) பண்புத்தொகை       - வட்டத்தொட்டி

          இ) வினைத்தொகை      - தேர்ப்பாகன்

          விடை: இ) வினைத்தொகை - தேர்ப்பாகன் 

 7.       நான்காம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்க                 தொகைக்குச் சான்று

          அ) கரும்பு தின்றான்

          ஆ) தமிழ்த்தொண்டு

          இ) மதுரைச் சென்றார்

          விடை: ஆ) தமிழ்த்தொண்டு

 8.       இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்

          அ) மார்கழித் திங்கள்

          ஆ) மலர்க்கை

          இ) தேர்ப்பாகன்

          விடை: அ) மார்கழித் திங்கள்

9.       பொருத்துக.

          அ) தேர்ப்பாகன்   - 1. வினைத்தொகை

          ஆ) கொல்களிறு   - 2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          இ) வட்டத்தொட்டி- 3. உமமைத்தொகை

          ஈ) மலர்க்கை        - 4. வேற்றுமைத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 2,1, 4, 3

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஈ) 4, 1, 2, 3

10.     பொருத்துக.

          அ) முறுக்கு மீசை வந்தார்       - 1. வினைத்தொகை

          ஆ) சாரைப்பாம்பு        - 2. உம்மைத்தொகை

          இ) அண்ணன் தம்பி    - 3. அன்மொழித்தொகை

          ஈ) வீசு தென்றல்           - 4. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

          அ) 2, 3, 4, 1

          ஆ) 3, 4, 2, 1

          இ) 1, 2, 3, 4

          ஈ) 4, 1, 2, 3

          விடை: ஆ) 3, 4, 2, 1


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here

     பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி   - ப. சிங்காரம்  துணைப்பாடம்

பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் துணைப்பாடம்

 

           
     

புயலிலே ஒரு தோணி
                              - ப. சிங்காரம்

1.      வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப்             பெயர் வைக்கும்  நடைமுறை  தொடங்கப்பட்ட ஆண்டு

          அ) 2000

          ஆ) 2001

          இ) 2004

          விடை: அ) 2000

 2.       கஜா புயலின் பெயரைத் தந்த நாடு

          அ) வங்கதேசம்

          ஆ) இலங்கை

          இ) இந்தியா

          விடை: ஆ) இலங்கை

 3.       ‘கப்பித்தான்' - இச்சொல் எதைக் குறிக்கிறது?

          அ) புயல்

          ஆ கப்பல்

          இ) தலைமை மாலுமி

          விடை: இ) தலைமை மாலுமி

 4.       பெய்ட்டி புயலின் பெயரைத் தந்த நாடு.

          அ) தாய்லாந்து

          ஆ) இந்தியா

          இ) இலங்கை

          விடை:  அ) தாய்லாந்து

 5.       ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய்த் தீவுகளைத்             தாக்கும் புயல்கள்

          அ) இடம்புரிப் புயல்கள்

          ஆ) வலம்புரிப் புயல்கள்

          இ) கொரியா புயல்

          விடை: ஆ) வலம்புரிப் புயல்கள்

 6.       'தொங்கான் தன்வசமின்றித் தடுமாறிச் செல்கிறது' -                     இத்தொடரில் 'தொங்கான்' என்பதன் பொருள்

          அ) கப்பல்

          ஆ) புயல்

          இ) பயணி

          விடை: அ) கப்பல்

 7.       கொரியாலிஸ் விளைவை 1835- இல் கண்டுபிடித்தவர்

          அ)  குருஸ்டாவ்

          ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

          இ) சிங்காரம்

          விடை: ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

 8.       'பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி' - இத்தொடர் இடம்             பெற்ற நூல்

          அ) கலித்தொகை

          ஆ) புறநூனூறு

          இ) அகநானூறு

          விடை: இ) அகநானூறு

9.       'புயலிலே ஒரு தோணி ' எனும் புதினத்தில் நம் பாடப்பகுதி             இடம் பெற்ற அத்தியாயம்

          அ) கலைக்கூத்து

          ஆ) கடற்கூத்து

          இ) இசைக்கூத்து

          விடை: ஆ) கடற்கூத்து

 10.     புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்

          அ) தோணி வருகிறது

          ஆ) புயலிலே ஒரு புதிர்

          இ) புயலிலே ஒரு தோணி

          விடை: இ) புயலிலே ஒரு தோணி 

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here



INTERNAL STRUCTURE OF HUMAN HEART

                                 

Sunday, August 30, 2020

திறந்த மற்றும் மூடிய இலைத்துளை

 


மனித இதயத்தின் புறத்தோற்ற அமைப்பு

 


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழி தேர்வு

 


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள்

 


காற்றே வா

                                                              - பாரதியார்

 1.         ‘காற்றே, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்  கொண்டிரு' கோடிட்ட சொல்லின் பொருள்.

            அ) இனிமையாக

            ஆ) சீராக

            இ) செம்மையாக

            விடை: ஆ) சீராக

 2.         கீழ்கண்ட பாரதியார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

            அ) சிறுகதை ஆசிரியர், இதழாளர், கட்டுரையாளர்

            ஆ) கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

            இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

            விடை: இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

 3.         உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

            அ) வசன கவிதை

            ஆ) புதுக்கவிதை

            இ) மரபுக்கவிதை

            விடை: அ) வசன கவிதை

 4.         சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்

            அ) பாரதிதாசன்

            ஆ) பாரதியார்

            இ) கண்ணதாசன்

            விடை: ஆ) பாரதியார்

 

5.         புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிருந்தது

            அ) உணர்ச்சி கவிதை

            ஆ) மரபுக் கவிதை

            இ) வசன கவிதை

            விடை: இ) வசன கவிதை

 6.         பொருத்துக.

            அ) மயலுறுத்து               - 1. சீராக

            ஆ) ப்ராண- ரஸம் - 2. அழிந்து

            இ) லயத்துடன்               - 3. மயங்கசெய்து

            ஈ) மடிந்து                        - 4. உயிர்வளி

            அ) 2, 3, 4, 1

            ஆ) 1, 3, 4, 2

            இ) 3, 4, 1, 2

            ஈ) 3, 2, 1, 4

            விடை: இ) 3, 4, 1, 2